MailPrint
வித்தியாசமான இடம் தேடும் இயக்குநர்
[ Thursday, 29 July 2010, 11:56.38 AM GMT +05:30 ]
கே.வி. ஆனந்த் ஜீவா, அஜ்மலை வைத்து இயக்கும் படம் கோ. இந்தப் படம் வேகவேகமாக வளர்ந்து வருகிறது.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் பாடல் காட்சிகள் சில மட்டும் மீதம் இருக்க எங்காவது வித்தியாசமான இடங்களைத் தேர்ந்தெடுத்து ஷூட் பண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறது இயக்குநர் தரப்பு.

இதனால் சீனா மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் இதுவரையில் சினிமாகாரர்கள் கால்படாத இடமாகத் தேடிப் பிடித்து படம் பிடிக்கப் போகிறார்களாம். சமீபத்தில் ‘கோ’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சென்னையில் உள்ள பரபரப்பான பகுதியான மின்ட் ஸ்ட்ரீட்டில் படம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.