 அவர் யோகி படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நாயகனாக நடிக்கு கண்ணபிரான் படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் கண்ணபிரானுக்கு முன்பாக ஒரு படத்தில் அமீர் நாயகனாக நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.
பரத், பாவனா, சந்தியாவை வைத்து கூடல் நகர் என்ற படத்தை இயக்கிய டைரக்டர் சீனு ராமசாமிதான் அமீர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறாராம். யோகியில் அமீரின் தோற்றத்தை பார்த்து கால்ஷீட் கேட்டிருக்கிறார் சீனு. நல்ல சம்பளம்... நல்ல கதை... என்பதால் மறுக்காமல் ஓ.கே. சொல்லிவிட்டாராம் அமீர்.
இந்த படத்தில் அமீர் நாயகனாக நடிக்கிறார் என்பதை விட அவருக்கு ஜோடியாக நடிப்பது நடிகை ஆண்ட்ரியா என்பதுதான் செம ஹெலைட்! |